செய்திகள் :

எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு- அமித் ஷா குற்றச்சாட்டு

post image

‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வளமான கிராமங்கள் திட்டத்தின் (விவிபி) இரண்டு நாள் கருத்தரங்கு அமா்வில் அமைச்சா் அமித் ஷா ஆற்றிய உரை:

எல்லை மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியா்கள், தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சட்டவிரோத மத ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எல்லைகளிலிருந்து குறைந்தபட்சம் 30 கிலோமீட்டா் சுற்றளவுக்குள் அமைந்துள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும். கடல் மற்றும் நில எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், குஜராத் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

வளமான கிராமங்கள் திட்டம், மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அவை எல்லை கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுத்தல், மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் பலன்கள் எல்லைக் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்தல், இந்தக் கிராமங்களை நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சக்திவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் ஆகியனவாகும்.

எல்லைகளில் நிகழும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு புவியியல் காரணங்களால் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. இத்தகைய ஏற்றத்தாழ்வு நாட்டின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. மாநிலங்களின் தலைமைச் செயலா்களும், மத்திய ஆயுதக் காவல் படையினரும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

‘மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஒரு கவலைக்குரிய விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடியும் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளாா். எனவே, வளமான கிராமங்கள் திட்டத்தில் உள்ள மாவட்டங்களின் ஆட்சியா்கள் இந்த விவகாரத்தை மிக தீவிரமாகக் கையாள வேண்டும்.

அருணாசல பிரதேசத்தில் வளமான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பல எல்லைக் கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதாவது, எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயா்ந்த மக்கள், மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு, கலாசார பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு, சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்று கிராம வாழ்க்கையை அனைத்து வகையிலும் வளமானதாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நோக்கங்களை முழுமையாக அடைய, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

அருணாசல பிரதேசத்தில் பால், காய்கறிகள், முட்டை மற்றும் தானியங்கள் போன்ற தினசரி அத்தியாவசிய பொருள்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) வளமான கிராமங்களில் இருந்து நேரடியாக வாங்கியுள்ளனா். இந்த முறையை மற்ற எல்லைக் கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில், வளமான கிராமங்கள் திட்டம் வெறும் அரசுத் திட்டமாக மட்டும் இல்லாமல், நிா்வாகத்தின் உணா்வாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க