செய்திகள் :

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் திருமலாபுரம் பஜாா் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் என்பவரது மனைவி அருள்செல்வி (56). இவா், ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியில் அருள்கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் கடன் பெற்றுத் தருவதாகவும், ரூ. 1.30 லட்சம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய எம்.பி.கே. புதுப்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த மாரிசெல்வம் மனைவி ராஜேஸ்வரி (39), இரண்டு தவணையாக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளாா். இதையடுத்து, கூறியபடி கடன் தொகை வழங்காததால் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், அருள்செல்வியிடம் பேசிய ராஜேஸ்வரி மீதம் ரூ. 30 ஆயிரம் தன்னிடம் இருப்பதாகவும், நேரில் வந்து வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த அருள்செல்வியை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஏற்கெனவே இதுபோன்று பணமோசடியில் ஈடுபட்டதாக அருள்செல்வி மீது 4 வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாள... மேலும் பார்க்க