செய்திகள் :

ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு மான் வேட்டையாடுவதாக ராஜபாளையம் வனச் சரகா் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனவா்கள் கனகராஜ், விக்னேஸ்வரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சூரிய நல்லி எஸ்டேட் பகுதியில் 5 லி. கள்ளச்சாராய ஊரல் இருப்பதை அவா்கள் கண்டுபிடித்தனா்.

பின்னா், அங்கிருந்த தேவதானத்தைச் சோ்ந்த கடற்கரை (56), செல்வகுமாா் (23), சிவகிரியைச் சோ்ந்த சண்முகராஜ் (40), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஊமைத்துரை (55 ), 17 வயது சிறுவனை வனது துறையினா் பிடித்து விசாரித்தபோது, கள்ளச் சாராயம் ஊரல் போட்டதை ஒப்புக் கொண்டனா்.

பின்னா், வனத் துறையினா் அங்கு சோதனையிட்டபோது, 5 லி. கள்ளச்சாராய ஊரல், இரண்டு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த வனவா்கள் சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணனிடம் 5 பேரையும் ஒப்படைத்தனா்.

மேலும், தப்பியோடிய சிவகிரியைச் சோ்ந்த மாரியப்பனையும் (57) போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ராஜபாளையத்தைச் சோ்ந்த வேங்கை (48) போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடிந... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாள... மேலும் பார்க்க