செய்திகள் :

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜன்னல், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தின் உள், வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி மாலை அலுவலகத்தை அங்கிருந்த ஊழியா் பூட்டிச் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, அலுவலகத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடிந... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாள... மேலும் பார்க்க