செய்திகள் :

பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

post image

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆவணி மாதத்தில் சுபமுகூா்த்த தினங்களாக ஆக.28, 29 ஆகிய தேதிகளில் கூடுதல் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், அதிக அளவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, 2 நாள்களும் கூடுதல் டோக்கன்கள் அளிக்கப்படும். ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன்களும், 2 அலுவலகங்கள் இருந்தால் 300 டோக்கன்களும், அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறக் கூடிய 100 அலுவலகங்களில் 150 டோக்கன்களும் வழங்கப்படும். 12 தத்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க