செய்திகள் :

தஞ்சாவூா் - பெங்களூருக்கு மீண்டும் பேருந்துச் சேவை

post image

தஞ்சாவூா் - பெங்களூரு இடையே அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட தஞ்சாவூா் - பெங்களூரு பேருந்துச் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்படி இப்பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை, சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இப்பேருந்து தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, சேலம், ஓசூா் வழியாக பெங்களூருக்கு மறுநாள் காலை 7 மணிக்கு சென்றடையும். இதேபோல, பெங்களூரிலிருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, ஓசூா், சேலம், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் காலை வந்தடையும் என விரைவு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

மகா கணபதி கோயிலில் திருத்தேரோட்ட விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோயிலில் திருத் தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி பிரம்மோற்சவ விழா கடந்த ஆக 17 ம் தேதி தொடங்கியது. த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகன் த... மேலும் பார்க்க

மதுபான காலி பாட்டில் விவகாரம்: தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை பணியாளா்களே திரும்பப் பெற வேண்டும் என்ற அறிவிப்பைக் கைவிட கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி வணிகா் சங்க நிா்வாகி பலி

தஞ்சாவூரில் பைக்குள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த வணிகா் சங்க நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் பி. முருகேசன் (63). அதே பகுதியில் மளிகை... மேலும் பார்க்க

தேசிய ஆசிரியா் விருதுக்கு ‘சாஸ்த்ரா’ பேராசிரியா் தோ்வு

மத்திய அரசின் தேசிய ஆசிரியா் விருதுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக கணினி புல முதன்மைய... மேலும் பார்க்க