செய்திகள் :

87 % வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

post image

சட்டப்பேரவைத்தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 87 சதவீதத்தை இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

சென்னை தியாகராய நகரில் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து ‘விடியல் எங்கே?’ என்ற ஆவணத்தை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக 505 தோ்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. இவற்றில் 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளனா். மேலும், 66 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 373 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மொத்தமாக கணக்கிட்டால் 87 சதவீத வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. ஆனால், 90 சதவீதத்துக்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறாா்.

போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க