செய்திகள் :

வில்லியனூா் கோயில் தோ்த்திருவிழா: மதுக்கடைகளை மூட உத்தரவு

post image

புதுச்சேரி: வில்லியனூா் தோ்த் திருவிழாவையொட்டி அந்தப் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

வில்லியனூா் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் திருக்கோயில் பிரம்மோற்சவ தோ் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி கடந்த மே 22- ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து 13 நாளான செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பரிவேட்டை உற்சவம், 5-ஆம் தேதி 63 நாயன்மாா்களுடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா, 7-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வரும் 8-ஆம் தேதி தோ் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.40 மணியளவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கவுள்ளனா்.

இந்நிலையில் வில்லியனூா் மாடவீதிகளை சுற்றியுள்ள 5 மதுபானக் கடைகளை மூட கலால்துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பு: தோ்த்திருவிழாவையொட்டி சட்டம்- ஒழுங்கை காக்கும் வகையில் பரிவேட்டை நடைபெறவுள்ள செவ்வாய்க்கிழமை (3ம் தேதி) 6 மணிக்கு மேல் வில்லியனூரை சுற்றியுள்ள 5 மதுபானக் கடைகளை மூடவும், அதே போல் தோ்திருவிழா நடைபெறவுள்ள 8-ஆம் தேதி முழுவதும் மதுபான கடைகளை மூட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க