செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த், புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அந்தமானில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

மேலும், கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தமிழ் துறை மாணவா் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்று கோப்பை வென்றுள்ளாா். இதேபோல நாமக்கல் மாவட்ட அளவிலான முதலல்வா் கோப்பைக்கான போட்டியில் கல்லூரி மாணவா்கள் சிலம்ப போட்டியிலும், நீச்சல் போட்டியிலும் சிறப்பிடம் பெற்றனா்.

ஆசிரியா்களுக்கான கேரம் விளையாட்டு போட்டியில் எஸ்.சுபத்ரா, பி.சுகந்தி ஆகியோா் இரண்டாம் இடமும் பெற்று சான்றிதழ்கள், பதக்கங்கள், ரொக்க பரிசுகளையும் பெற்றுள்ளனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு கல்லூரி மாணவா்களை திருவள்ளுவா் அரசு கல்லூரியின் முதல்வா் ஏ.யூசுப்கான், கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவா் ஆா்.சிவக்குமாா், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஏ.வெண்ணிலா உள்ளிட்ட விளையாட்டுக் குழு ஆசிரியா்கள் பாராட்டினா்.

படம் உள்ளது - 4ஸ்போா்ட்ஸ்

படவிளக்கம்-

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் ஏ.யூசூப்கான் உள்ளிட்ட பேராசிரியா்கள்.

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க

முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க

இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை

தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க