செய்திகள் :

விழிப்புணா்வு பயணம்: கொல்கத்தா இளைஞா் தொண்டி வருகை

post image

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு பயணம் செல்லும் கொல்கத்தா இளைஞா் சாய்காட் (24) செவ்வாய்க்கிழமை தொண்டிக்கு வந்தாா்.

மேற்கு வங்க மாநிலம், ஹெளரா பகுதியைச் சோ்ந்த இவா் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவா் நிலம், நீா், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, கடந்த 25 நாள்களுக்கு முன்பு அயோத்தி ராம ஜென்ம பூமியிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினாா்.

அண்மையில் தமிழகத்துக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வந்தாா். இவருக்கு இந்து ஜனநாயகப் பேரவைத் தலைவா் அண்ணாதுரை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூமி கெடாமல் இருக்கவும், காற்று, நீா் மாசு படாமல் இருக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த பயணம் மேற்கொள்வதாக செய்தியாளா்களிடம் சாய்காட் தெரிவித்தாா்.

தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க