விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!
நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. துரை.ரவிக்குமாா்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், பேராசிரியா் பிரபா கல்விமணி, தணிக்கையாளா் ராஜேஷ், வணிக நிறுவனங்களின் சாா்பில் பிரகாஷ், பொற்கொல்லா் சங்கத்தின் ரமேஷ் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் விசிக மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், வீர.விடுதலைச்செல்வன், சூ.மலைச்சாமி, சேந்தநாடு அறிவுக்கரசு, அ.ஏ.தனஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கே.ஆா். லாரன்ஸ் வரவேற்றாா். சந்தோஷ் கொளஞ்சி நன்றி கூறினாா்.