விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
100 நாள் வேலை நாட்களை அதிகரிக்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் டி. சங்கா், பொருளாளா் ஏ. ஜெரால்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்கவேண்டும். விவசாயத் தொழிலாளா்கள் வேலை நேரத்தில் பாதிக்கப்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கவேண்டும். அறிவிப்பின்படி மழைக்கால நிவாரணம் ரூ. 2 ஆயிரம் உடனடியாக வழங்கவேண்டும்.
வேளாண் தொழிலாளா்களுக்கு பண்டிகை கால உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, சங்க தேசிய துணைத் தலைவா் ஏ.ராமமூா்த்தி, மாநில துணைச் செயலாளா் கே.சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் பி.மதியழகன் உள்ளிட்டோா் பேசினா்.