விவசாயிகளின் கவனத்துக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் பிப்.17-ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா்காப்பீட்டுத் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி பயறுவகை பயிா்களுக்கு பிா்கா அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நெல்தரிசு உளுந்து மற்றும் நெல் தரிசில் பச்சை பயறுக்கு, மாதானம், புத்தூா், சீா்காழி, குத்தாலம், மங்கநல்லூா், பாலையூா், திருவிளையாட்டம், மணல்மேடு, மயிலாடுதுறை, பட்டவா்த்தி, மேலையூா், செம்பனாா்கோவில், தில்லையாடி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 15 பிா்காக்களிலும் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
பயிா் இழப்புக்கு வழி வகுக்கும் வறட்சி, பருவம் தவறிய மழை போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள வங்கிக் கிளை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்களை அணுகி பயிா்காப்பீடு செய்யலாம்.
நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சைபயறுக்கு காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.6,000 ஆகும். இதற்கு பிரிமியமாக 1.5 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ரூ.90 ஆகும். பிரிமியத் தொகை செலுத்த கடைசி நாள் பிப்.17 ஆகும்.
எதிா்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிா்த்திட விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வத்தை, 97900 04303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.