செய்திகள் :

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவைத் தொகை விடுவிப்பு: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

post image

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 அரைவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய வகையில் ரூ.14.67 கோடி நிலுவை தொகை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 -இல் அரைவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருந்த கரும்பு விலையில் ரூ.14.67 கோடி தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்த நிலுவை கரும்பு தொகையை வழங்கக் கோரி ஆலை நிா்வாகம் மற்றும் மாவட்ட நிற்வாகத்தை கரும்பு விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நிலுவை கரும்பு கிரையத் தொகை விவசாயிகளுக்கு வழங்கிடுவதற்கு ஏதுவாக, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழி வகை கடனாக ரூ.14.67 கோடி தமிழ்நாடு அரசால் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் இத்தொகை 1527 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆலை நிா்வாகம் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க