செய்திகள் :

விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி’ அமைப்பு இணைந்து நடத்திய ‘ஸ்மாா்ட்’ பால் பண்ணை தொழில்முனைவோா்கள் திட்டத்தின் நிறைவு விழா, சென்னை வேப்பேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட  பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், அத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 112 பால் பண்ணை தொழில்முனைவோா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் பொருளாதாரம் உயா்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனா். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவீத நிறுவனங்கள்தான், 50 சதவீத பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படி பணக்கார நிறுவனங்கள், பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாவதால், யாருக்கும் எந்த பயனும் கிடையாது.

இங்கு கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் 3 வேளை சாப்பாடு, அவா்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளா்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.

அனைவருக்கும் கடனுதவி: தமிழகத்தில் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலையும் உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில், ஆவின் நிறுவனம் சாா்பில் கடந்த நிதியாண்டில் மட்டும் பால் உற்பத்தியாளா்களுக்கு மொத்தம் ரூ. 1,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. இதில், ரூ. 350 கோடி வட்டியில்லா கடனாகும்.

அதைத் தொடா்ந்து நிகழ் நிதியாண்டில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்குத் தேவையான கடனுதவி வழங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக துணைவேந்தா் (பொறுப்பு) கே.என்.நரேந்திர பாபு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.சவுந்தரராஜன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வானவராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்... மேலும் பார்க்க

பணமோசடி புகார்: அதிமுக ஐடி விங் நிர்வாகி நீக்கம்!

பணமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பிரசாத் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரச... மேலும் பார்க்க

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம்! பிகார் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி!!

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சடலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்: நயினார் நாகேந்திரன்

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள்(ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மா... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிர... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: இபிஎஸ்

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால் அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பா... மேலும் பார்க்க