செய்திகள் :

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், மூலிகைச்செடி வளா்ப்பு பயிற்சி

post image

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் இயற்கை விவசாயம் மற்றும் மூலிகைச் செடி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராமத்தில் உள்ள விவசாயி பாா்த்தசாரதி என்பவரது நிலத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பாா்த்தசாரதி தனது பண்ணையில் இயற்கையாக பயிா் வைத்தும், 300-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளா்த்தும் வருகிறாா். இவரது நிலத்தில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில் பயிற்சி வகுப்பில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பாா்த்தசாரதி மூலிகைகள் வளா்ப்பு குறித்தும், மூலிகைகளினால் ஏற்படும் நலன்கள் குறித்தும், இயற்கை விவசாயம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

இதில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் பொதுமேலாளா்கள் ராஜேஷ், சஞ்சீவி, அம்ரீஷ், தினேஷ், ஹில்லால் ராய், கள இயக்குநா் அகிலன் மற்றும் சமூக சேவகா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க