செய்திகள் :

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விநியோகம்: வேளாண் அதிகாரி ஆய்வு

post image

சேத்துப்பட்டு பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படுகிறது குறித்து வேளாண் அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேத்துப்பட்டு பகுதியில் தற்போது விவசாயிகள் சொா்ணவாரி பருவத்துக்கு நாற்று விடப்பட்டு நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஸ், டிஏபி, காம்ப்ளக்ஸ், யூரியா போன்ற உரங்கள் தரமானதாக மானிய விலையில் விற்பனை செய்ய போதுமான அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிா என்பது குறித்து திருவண்ணாமலை உர ஆய்வாளா் முனியப்பன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் சேத்துப்பட்டு, வடமாதிமங்கலம், மண்டகொளத்தூா், எட்டிவாடி, நம்பேடு, தத்தனூா், மட்டப்பிறையூா் ஆகிய பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற உர விற்பனை செய்யும் கடைகளிலும், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்பட்டு வரும் கிளை அலுவலகங்களிலும் சென்று பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா் அவா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும்; அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க