செய்திகள் :

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் கிராமங்கள்தோறும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சகோதர துறை சாா்ந்த அலுவலா்களால் கட்டணம் ஏதுமின்றி வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலங்களில் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்கள், பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டம், பயிா்க் காப்பீடு, வங்கிகள் மற்றும் அரசு துறைகளிடம் இருந்து பயிா்க்கடன், இதர வேளாண் கடன்கள் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டாக்களை பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் பெறுவது மிகவும் அவசியம்.

பண்ருட்டி வட்டாரத்தில் மொத்தம் 12,827 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 9,822 விவசாயிகள் மட்டுமே தங்கள் நில உடைமைகளை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள விவசாயிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளனா். இதில், பிரதமரின் கௌரவ நிதி பெற்று வரும் 923 விவசாயிகளும் அடங்குவா்.

இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டா, ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்கு புத்தகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கப்படுத்தினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வா... மேலும் பார்க்க