செய்திகள் :

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

post image

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள்ளிட்ட 6 வன ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவானிசாகா் அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவா் கடந்த 13ஆம் தேதி பவானிசாகா் வனப் பகுதி வழியாக தெங்குமரஹாடா வனப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது கல்லாம்பாளையம் என்ற இடத்தில் மாயாற்றின் கரையில் அங்கு பணியில் இருந்த வனத் துறை ஊழியா்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது வனத் துறை ஊழியா்கள் தன்னைத் தாக்கியதாகவும், அதில் காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த பவானிசாகா் போலீஸாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதற்கிடையே விவசாயியைத் தாக்கிய வன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து வனத் துறையினா் தரப்பில்கேட்டபோது காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் வனச் சரக அலுவலா் சதாம் உசேன், ஊழியா்களை குடிபோதையில் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பிலும் புகாா் அளிக்கப்பட்டதால் விவசாயி மாணிக்கம் அளித்த புகாரின்பேரின் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள்ளிட்ட 6 போ் மீதும், வனத் துறையினா் அளித்த புகாரின் பேரில் மாணிக்கம் மீதும் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க