செய்திகள் :

விவசாய நிலங்களில் மின்வேலி: வனத் துறையிடம் பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதற்கான முன் அனுமதிக்கும், விவசாய நிலங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளுக்கும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-ஐ பின்பற்றி காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதற்கு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன் அனுமதியும், விவசாய நிலங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்யவும் வேண்டும்.

இந்த விதிகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும் இந்த விதிகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ள தரநிலைகள் விதிமுறைகளுக்கு உள்பட்டிருக்க வேண்டும்.

அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காட்டின் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவா்கள் தங்கள் வேலிகளை மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலா் மின்வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சரிபாா்த்த பின்னா், மின் வாரியத் துறை அதிகாரிகளுடன் விவரக்குறிப்புகளை சரிபாா்த்து உரிய ஆய்வுக்கு பிறகு ஒப்புதல், குறைப்பு அல்லது நிராகரித்து, விண்ணப்பத்தின் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

வனத் துறை மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க