செய்திகள் :

விவோ ஒய் 400 5ஜி இந்தியாவில் அறிமுகமாவது எப்போது? சிறப்புகள் என்னென்ன?

post image

விவோ நிறுவனத்தில் புதிதாக ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விவோ நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒய் வரிசையில் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. அதோடுமட்டுமின்றி, முந்தைய ஸ்மார்ட்போன்களில் இருந்து வேறுபடும் வகையில் எண்ணற்ற செய்யறிவு அம்சங்களைக் கொண்டதாக அறிமுகமாகிறது விவோ ஒய் 400 5ஜி.

விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போன், ஜூன் 20ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக விவோ அறிவித்துள்ளது.

வெண்மை மற்றும் வெள்ளி நிறத்தில் வரவுள்ள இந்த ஒய் 400 5ஜி, முந்தைய ஸ்மார்ட்போன்களை விட சற்று அளவில் பெரியது. முன்பக்கம் இரு கேமராக்களுடன் எல்.இ.டி. விளக்கும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

வளைந்த 3D திரையுடன் மிகவும் மெலிதான வடிவமைப்பு விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மெலிதான வடிவமுடைய ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும்.

திரையின் வெளிச்சம் 4500nits அளவுக்கு இருக்கும். பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 புராசஸர் உடையது. 256GB நினைவகவும் 8GB உள்நினைவகமும் கொண்டது.

ஏஐ டிரான்ஸ்கிரிப்ட், ஏஐ சூப்பர்லிங்க், ஏஐ நோட் அசிஸ்டென்ட், ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் உள்ளிட்ட செய்யறிவு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் இதன் அறிமுக விலை ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நினைவக திறனின் அளவைப் பொறுத்து விலை மாறுபடும்.

இதையும் படிக்க | விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?

ரூ.1500 கோடி செலவில் வீட்டுவசதி திட்டத்தை அறிமுகம் செய்த கோத்ரெஜ் பிராபர்டீஸ்!

மும்பை: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் லிமிடெட், பெங்களூருவில் 14 ஏக்கர் அளவில் வீட்டுவசதி திட்டத்தை உருவாக்க நில உரிமையாளருடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தது.கிழக்கு பெங்களூருவின் ஹோ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் வலுவான போக்கும், பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 8 காசுகள் உயர்ந்து ர... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து நிலையில், முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் எண்ணெய் பங்குகளில் வெகுவாக கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃ... மேலும் பார்க்க

ரியல்மீயில் ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் அதீத பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்!

ரியல்மீ நிறுவனத்தின் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அதீத பேட்டரி திறனுடன் அறிமுகமாகவுள்ளது. பட்ஜெட் விலையில் ரூ. 10 ஆயிரத்துக்குக் கீழ் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்... மேலும் பார்க்க

விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?

ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக கையடக்கக் கணினி (டேப்) அறிமுகமாகவுள்ளது. பேட் லைட் என்ற பெயரில், வரவுள்ள இந்த கையடக்கக் கணினியானது இதற்கு முன்பு வந்த ஒன்பிளஸ் பேட் கோ-வில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள் கிழமை) பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,034.45 என்ற புள்ளிகளில் தொடங்கி நிலையில்... மேலும் பார்க்க