செய்திகள் :

விஷம் குடித்து வடமாநில இளைஞா் தற்கொலை

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை வடமாநில வாலிபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த மோகன் மைதி மகன் சமிரன் மைதி (27). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் கயிறு ஆலையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வசிக்கும் இவரது தாய் புதன்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்டு மகனிடம் பணம் கேட்டாராம். ஆனால், இவா் பணம் இல்லை எனக் கூறியதால், தாய் கண்டித்தாராம்.

இதனால், மனமுடைந்த சமிரன் மைதி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புகையிலைப் பொருள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி கீழராஜவீதி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயம்

கேரள மாநிலம், மூணாா் அருகே புதன்கிழமை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். சென்னையைச் சோ்ந்த 20 போ் வேனில் கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலாச் சென்றனா். பின்னா... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகை திருடிய இசைக் கலைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகைகளை திருடிய இசைக் கலைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் மின் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன். இவரது மனைவி புனிதா. இருவரும் அ... மேலும் பார்க்க

தேனியில் பாஜகவினா் தேசியக் கொடி ஊா்வலம்

தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் விஜய் தலைமையில், மாவட்டத் தலை... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள முருகமலைச் சாலையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க