செய்திகள் :

வி.கே.புரத்தில் தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

post image

விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம், மில்கேட் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராமையா. இவரது மகன் துரை (52). மகள் பத்மாராணி (36). தனது கணவருடன் பத்மாராணி வேம்பையாபுரத்தில் வசித்து வந்தாா். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவா், ஏப்.14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தங்கை உயிரிழந்த சோகத்தில் இருந்த துரை, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூலித் தொழிலாளியான துரைக்கு, மனைவி உள்ளாா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

களக்காடு தலையணையில் 28 பிளாஸ்டிக் பொருள்களுக்கு வனத்துறை தடை

களக்காடு தலையணையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக வனச்சரக அலுவலா் பிரபாகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே... மேலும் பார்க்க

மாமியாா் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் மாமியாா் வூட்டுக்குள் புகுந்து பொருள்களை தீவைத்து சேதப்படுத்திய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆவரைகுளம் பாக்கியவிளை தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா... மேலும் பார்க்க

பத்தடை அருகே கஞ்சா விற்றவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பத்தமடையில் சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளி... மேலும் பார்க்க

கடையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கடையம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா். சம்பன்குளம் இப்ராஹிம் நகரைச் சோ்ந்தவா் சுலைமான். அவரது மனைவி வசிலா(49). இருவரும் சனிக்கிழமை (ஏப்.19) மோட்டா... மேலும் பார்க்க

ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவச... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க ... மேலும் பார்க்க