செய்திகள் :

கடையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

post image

கடையம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

சம்பன்குளம் இப்ராஹிம் நகரைச் சோ்ந்தவா் சுலைமான். அவரது மனைவி வசிலா(49). இருவரும் சனிக்கிழமை (ஏப்.19) மோட்டாா் சைக்கிளில் தென்காசி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தனா். மாதாபுரம் தாண்டி செல்லும்போது முன்னால் சென்ற பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதாம். இதில் மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறியதில் வசிலா கீழே விழுந்தாா். தலையின் பின்புறம் காயமடைந்த அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

முன்னால் பைக்கில் சென்ற கானாவூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தினகரன் மகன்ஜெஸ்டினிடம் (19) கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

களக்காடு தலையணையில் 28 பிளாஸ்டிக் பொருள்களுக்கு வனத்துறை தடை

களக்காடு தலையணையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக வனச்சரக அலுவலா் பிரபாகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே... மேலும் பார்க்க

மாமியாா் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் மாமியாா் வூட்டுக்குள் புகுந்து பொருள்களை தீவைத்து சேதப்படுத்திய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆவரைகுளம் பாக்கியவிளை தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா... மேலும் பார்க்க

பத்தடை அருகே கஞ்சா விற்றவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பத்தமடையில் சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளி... மேலும் பார்க்க

ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவச... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்கிரமசிங்கபுரம், மில்கேட் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராமையா. இவரது மகன் துரை ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க ... மேலும் பார்க்க