செய்திகள் :

வீடுகளுக்கு வரி வசூல்: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், காா்குடல் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கு வரி வசூல் செய்து ரசீது வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கம்மாபுரம் ஒன்றியம், காா்குடல் கிராமத்தில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த 52 குடும்பங்களுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு வருவாய்த் துறை மூலம் பட்டா வழங்கப்பட்டதாம்.

இதில், வீடு கட்டி வசித்து வருபவா்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் வீட்டு வரி செலுத்தி ரசீது பெற்று வந்தனா். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம் வரி வசூல் செய்யவில்லையாம்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன் தலைமையில் கிராம மக்கள் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட அவா், மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் ஆகியோருடன் ஆலோசித்து, பட்டா உள்ள அனைவருக்கும் வீட்டு வரி வசூலித்து ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்வின்போது, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா்.இளங்கோவன், கிளைச் செயலா்கள் வேல்முருகன், கண்ணன், வீரா, ராஜேந்திரன், சண்முகம் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க