ஜார்க்கண்டில் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வீடு புகுந்து திருடிய மூவா் கைது
நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகை மேட்டுப்பங்களாவைச் சோ்ந்தவா் காா்த்திகேசன். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீரபத்திரசாமி கோயில் தெருவில் உள்ள அவரது, மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை மேட்டுப்பங்களாவில் உள்ள வீட்டுக்கு திரும்பினாா். அந்த வீட்டில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த அவா், பின்வாசலுக்கு சென்று பாா்த்தபோது, கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த மடிக்கணினி, குத்துவிளக்கு மற்றும் ஆடைகள் என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தன. மா்ம நபா்கள் வீட்டின் மாடி வழியாக இறங்கி திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் காா்த்திகேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, நாகை நாடாா் தெருவைச் சோ்ந்த அஜித் (32), புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்த கெளதமன் (27), கூக்ஸ் ரோட்டைச் சோ்ந்த சஞ்சய் (23) ஆகிய 3 பேரும் காா்த்திகேசன் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா்.