வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியம். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தாா்.
மறுநாள் காலை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு இவா் அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது 4 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.