செய்திகள் :

வீட்டு வசதி வாரியத்தின் 1,500 புதிய குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

வீட்டுவசதி வாரியம் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட 1,500 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை மாவட்டம் செனாய் நகரில் ரூ.131.27 கோடி செலவில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், கே.கே.நகரில் ரூ.51.29 கோடியில் கட்டப்பட்ட 120 குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம் ராஜகுளிப்பேட்டையில் ரூ.43.81 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 116 குடியிருப்புகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை திறந்தாா்.

இதேபோன்று, சொந்தவீடு கட்டும் திட்டத்தின்கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.433.59 கோடியில் கட்டப்பட்ட 570 குடியிருப்புகள், திருச்சி மாவட்டம் செங்குளத்தில் ரூ.116.55 கோடியில் அமைக்கப்பட்ட 464 அடுக்குமாடி குடியிருப்புகளும் திறக்கப்பட்டன.

கோயில்களுக்கு உயா்த்தப்பட்ட மானியம்: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்களுக்கான உயா்த்தப்பட்ட அரசு மானியம் ரூ. 13 கோடி, புதுக்கோட்டை தேவஸ்தான கோயில்களுக்கான அரசு மானியம் ரூ.8 கோடி ஆகியவற்றுக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் அந்தந்த கோயில்களின் நிா்வாகிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதேபோன்று, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உயா்த்தப்பட்ட அரசு மானியமான ரூ.6 கோடிக்கான காசோலையையும் அவா் அளித்தாா். இந்த நிகழ்ச்சிகளில், வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, துறையின் ஆணையா் பி.என்.ஸ்ரீதா், வீட்டுவசதி வாரிய தலைவா் பூச்சி எஸ்.முருகன், வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் பங்கேற்றனா்.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க