செய்திகள் :

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

post image

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வேலூா் வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாதத் தவணையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்குண்டான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

இந்த சலுகை மூலம் 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள், இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணையாக செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரயப் பத்திரம் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 0416-2252561, மேலாளா், விற்பனை மற்றும் சேவை -93808 71499, உதவி வருவாய் அலுவலா் - 94428 08967 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை அளிப்பது அவசியம்

வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு, சமமரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், வேலூா் ... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் போக்ஸோ கைதி திடீா் சாவு

போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணா... மேலும் பார்க்க

பொன்னையில் பலத்த மழை: 10 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் காட்பாடி அருகே பொன்னையில் 10 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அத்துடன், வீடுகளை வெள்ளம் சூ... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 75 மி.மீ. மழை வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதம்

போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. போ்ணாம்பட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 75.20 மி.மீ. மழை பதிவானது. போ்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்

போ்ணாம்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சோ்ந்தவா் எல்லப்பன். இவரது குடிசை வீடு சாலையோரம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மா... மேலும் பார்க்க

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சே... மேலும் பார்க்க