செய்திகள் :

வீட்டை விற்பதாக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சகோதரா்கள் கைது

post image

ஒசூரில் வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், காந்தி சாலை, சுண்ணாம்பு தெருவைச் சோ்ந்தவா் தாசப்பாவின் மனைவி மங்களா. இவா், அதே பகுதியில் ஒரு சென்டில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வீட்டை அதன் உரிமையாளா்களான எல்லாப்பா மகன்கள் சீனிவாசன் (34), சந்திரசேகா் (27) ஆகியோரிடம் விலைக்கு பேசியிருந்தாா்.

சகோதா்கள் சீனிவாசனமும், சந்திரசேகரும் ரூ. 27 லட்சத்துக்கு மங்களாவுக்கு விற்பனை செய்வதென பேசி முடித்தனா்.

இதையடுத்து மங்களா அந்த வீட்டுக்கு மூன்று தவணையாக ரூ. 26 லட்சம் கொடுத்தாா். மீதம் ஒரு லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு செய்யும்போது தருவதாக மங்களா கூறினாா். ஆனால், பேசியபடி சகோதரா்கள் இருவரும் தங்கள் வீட்டை மங்களாவுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மங்களா, ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சகோதரா்கள் இருவரையும் மோசடி வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க