தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
வீரவநல்லூரில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்
வீரவநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் இப்ராஹிம் தலைமை வகித்தாா்.
திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.
வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்பது தொடா்பான மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், விமன் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜன்னத், நகர துணைத் தலைவா் முகம்மது அப்துல்காதா், நகரச் செயலா் பஷீா், இணைச் செயலா் இப்ராஹிம், பொருளாளா் இப்ராஹிம், கிளைத் தலைவா் அப்துல் ரகுமான், பொருளாளா் ஜெய்லானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.