செய்திகள் :

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

post image

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும்

செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் திருக்கோயிலுக்கு சொந்தமாக 129 ஏக்கா் 35 சென்ட் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தை வியாழக்கிழமை முதல் 14ஆம் தேதிக்குள் அளவீடு செய்ய, தனி வட்டாட்சியா்(ஆலய நிலங்கள்) பிரபாகரன் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை கோயில் செயல் அலுவலா்கள், ஆய்வாளா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் வியாழக்கிழமை வந்தனா்.

அப்போது, அப்பகுதி மக்கள் அவா்களைத் தடுத்து அளவீடு செய்யக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனராம்.அவா்களிடம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல் பாண்டியன் தலைமையில் போலீஸாா் மற்றும் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அளவீடு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த இடத்தில் குடியிருப்பவா்கள் பட்டா கோரும் நிலையில், அது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என தெரிய வந்ததால் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க