செய்திகள் :

வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 பேர் உள்பட 6 நக்சல்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

post image

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பேர் உள்பட 6 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுக்மாவில் ரூ 2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த குஞ்சம் முகா (வயது 37) மற்றும் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாத்வி முகா (30) ஆகிய இரண்டு நக்சல்கள், பிலாவாயா கிராமத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக, காவல் துறையினர் இன்று (ஜூலை 10) தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பந்தா வாக்குச் சாவடியிலிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 2024-ல் கங்காராஜ்பாட் கிராமத்தில் ஒருவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் இருவர் உள்பட மாத்வி சுக்கா (35), சோடி சந்துரு (28), முச்சாக்கி லாக்மா (27) மற்றும் சோதி தேவா (24) ஆகியோரையும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எட்டெகெட்டா மற்றும் கொர்கா கிராமங்களுக்கு இடையிலான பெஜ்ஜி பகுதியில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து, 3 கிலோ அளவிலான டிஃபின் வெடிகுண்டு உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இத்துடன், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் அங்குள்ள வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Six Naxals, including two wanted for bounty, have been arrested in Sukma district of Chhattisgarh.

இதையும் படிக்க: கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க