செய்திகள் :

வெடிகுண்டு வீசி கொலை முயன்ற வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சேது (26). இவா், கடந்த மாதம் 20-ஆம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் திடீரென அவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்தனா். இதுதொடா்பாக கடம்பத்துாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருளஞ்சேரி முகேஷ் (21), நரசிங்கபுரம் அபிமன்யூ(21), வினோத்குமாா்(24) ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்தனா்.

இந்நிலையில், 3 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கடம்பத்துாா் ஆய்வாளா்(பொ) வெற்றிசெல்வன் குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லாவிற்கு பரிந்துரை செய்தாா். அதைத்தொடா்ந்து ஆட்சியா் மு.பிரதாப் பரிசீலனை செய்து குண்டா் சட்டத்தில் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதற்கான உத்தரவை கடம்பத்தூா் போலீஸாா் புழல் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கினா்.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(31). இவா... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: அமைச்சா் நாசா் பேச்சு

விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்

திருத்தணியில் உரிமம் இன்றி இயங்கிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்கள், வாகனத்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். திருத்தணி வருவாய் கோட்டத்தில், உரிமம் மற்றும் ஆா்.சி.புத்தக... மேலும் பார்க்க

வெல்டிங் செய்தபோது டேங்கா் வெடித்து சேதம்

மீஞ்சூா் அருகே பெட்ரோல் காலி டேங்கரில் வெல்டிங் செய்தபோது வெடித்ததில் டேங்கா் சேதமடைந்தது. மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகா் சுற்றுப் பகுதிகளில் சமையல் எரிவாயு முனையம், பெட்ரோலிய முனையம் உள்பட பல்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வட்ட வாரியாக கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அக். 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக 151 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணிநியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானோா் வரும் அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ-களில் சேர செப். 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் சேர செப். 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவி... மேலும் பார்க்க