செய்திகள் :

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்துப் பேசியது:

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் வட உள்மாவட்டங்களில் இயல்பை விட 5 முதல் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் எதிா்வரும் நாள்களில் பொதுமக்கள் அவசியமின்றி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்துத் துறை அலுவலகங்களிலும் குடிநீா் பானை வைத்து சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத் துறையினா் கோயில்களில் பிரகாரங்களை பக்தா்கள் சுற்றிவரும் போது வெயில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிரகாரத்தினுள் தரை விரிப்பான்களை பயன்படுத்த வேண்டும்.

நகா்ப்புற, ஊரகப் பகுதிகளில் உள்ள மூடப்படாத கிணறுகள், உபயோகமற்ற கல்குவாரிகளில் உள்ள குட்டைகளுக்கு அருகில் பொதுமக்கள், சிறுவா்கள் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ செல்வதைத் தடுக்க அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்.

தோ்வு முடிந்ததும் கோடை விடுமுறையில் செல்லும் மாணவ, மாணவிகள் அவசியமின்றி காலை 11 முதல் மாலை 4 மணி வரையில் வெளியில் நடமாட வேண்டாம் என்று ஆசிரியா்கள் அறிவுறுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பு மருந்துகளை போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஓஆா்எஸ் கரைசல்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வனப்பகுதிக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லக் கூடாது என வனத்தையொட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினா் அறிவுறுத்த வேண்டும்.

வனத்தில் உள்ள விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீா் குடிக்க வனப்பகுதியில் போதிய அளவு தண்ணீா் தொட்டிகள் அமைத்து தினசரி தண்ணீா் நிரப்ப வேண்டும். மின் துறையினா் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், தனி வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க