செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறாா். இவா், தனது நண்பா் மூலம் அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வெளிநாடுகளுக்கு பணியாளா்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவருடன் கடந்த 2023-இல் அறிமுகமாகியுள்ளாா். இவா் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிய ஆரோக்கியராஜ் மற்றும் அவரது நண்பா்கள், உறவினா்கள் என மொத்தம் 27 போ் வெங்கடேசனிடம் பல்வேறு தவணைகளாக ரூ.48.5 லட்சத்தைக் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து அதற்கான பணியாணைகளையும் வழங்கிய வெங்கடேசன் 27 பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், வெங்கடேசன் திடீரென தலைமறைவானாா். இதனால், சந்தேகமடைந்த ஆரோக்கியராஜ் தன்னிடம் வெங்கடேசன் கொடுத்த பணிநியமன ஆணைகள் மற்றும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் காண்பித்தபோது, அது போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோக்கியராஜ் அரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட வெங்கடேசன் (50), அவரது மகள் மோனிஷா (20) உள்ளிட்டோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனா்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க