செய்திகள் :

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

post image

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களின் எண்ணிக்கையே அதிகமாகும். கட்டுமானத் தொழிலாளா்கள் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக இணைவோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாரியத்தின் சாா்பில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் குறித்து களஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்படாதவா்களின் எண்ணிக்கை விவரங்கள், வெளி மாநிலத் தொழிலாளா்களின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் களஆய்வின்போது சேகரிக்கப்படவுள்ளன.

இந்த ஆய்வை நடத்துவதற்காக தகுதி வாய்ந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் செயலா் கோரியுள்ளாா். இணையதளம் வழியாக ஒப்பந்தப்புள்ளியை அளிப்பதற்கு செப். 17-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க