செய்திகள் :

வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ரூ.25,000 இழப்பீடு: நயினாா் நாகேந்திரன்

post image

ஜெயங்கொண்டம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, பொன்னாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த 75 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே பயிா்களுக்கு போதிய விலையின்மை, இடைத்தரகா்கள் தொல்லை, நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாதது எனப் பல இன்னல்களில் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நெல் பயிா்கள் தற்போது வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது அவா்களை மேலும் நிலைகுலையச் செய்துவிட்டது.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடாக வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க