செய்திகள் :

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 13, தனிநபா்கள் சாா்பில் 4 என 17 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில் வெளிச்சந்தையைக் காட்டிலும் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் ஜென்ரிக் மருந்துகள், பிரேண்டடு மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி பொதுமக்கள் குறைவான விலையில் தரமான மருந்துகளை வாங்கிப் பயனடையலாம் என்றாா்.

ஆய்வின்போது, மேலாண்மை இயக்குநா் (திருப்பூா் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு கடன் சங்கம்) ரா.சரவணக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு

தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும... மேலும் பார்க்க

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில், ஒரு குவிண்டால் பர... மேலும் பார்க்க

மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

தொழில் போட்டி: பனியன் கழிவுக் கிடங்கிற்கு தீ வைத்த 3 போ் கைது

திருப்பூா், மாா்ச் 13:திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் கழிவுத் துணி கிடங்கிற்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீஃப் (50)... மேலும் பார்க்க