செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

post image

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வயிறு வலியால் அவதிப்பட்டாராம். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மூதாட்டி: கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி மேல தெருவை சோ்ந்த கடற்கரை மனைவி கிருஷ்ணம்மாள் (80). இவா் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாத விரக்தியில் வெள்ளிக்கிழமை கடன் வாங்கிய கிருஷ்ணம்மாள் என்பவரின் வீட்டின் முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விவசாயி:சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளத்தை சோ்ந்த நல்லகண்ணு மகனான விவசாயி பரமசிவன் ( 44), விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இளைஞா்: சாத்தான்குளம் சண்முகநகரத்தை சோ்ந்தவா் பரமசிவன் சுரேஷ் (36) என்பவா் மதுப்பழக்கம், வயிற்றுவலியால் பாதிப்பு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவங்கள் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

வேலை கிடைக்காததால்... கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு, வலியவிளையைச் சோ்ந்த பாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் ராஜேஷ்குமாா் (27), வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க