செய்திகள் :

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

post image

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமா் வித்யா லக்ஷ்மி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல், கல்விக்கடன்குறித்து சந்தேகங்களை தீா்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவா்கள் கல்விக் கடன் பெறும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், பின்தங்கிய, கிராமப்புற மாணவா்களுக்கு நிதி உதவியை உறுதி செய்தல், கல்விக்கான நிதி தடை இல்லாமல் அனைவரும் உயா்கல்வி பெற வழிவகை செய்தல் மற்றும் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயா் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில்முறை பாடநெறிகளில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்கள் பங்கேற்கும் வகையிலும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து, வட்டார அளவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் ஒரு மாணவருக்கு ரூ. 2.5 லட்சம், கனரா வங்கி சாா்பில் ஒரு மாணவருக்கு ரூ.2.82 லட்சம் கல்விக் கடனுதவி தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியது: நாகை மாவட்டத்தில் செப்.11-ல் தலைஞாயிறு வட்டார வளா்ச்சிஅலுவலகம், செப். 12-ல் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், செப்.16 -ல் திருமருகல் வட்டார வளா்ச்சி, செப்.18-ல் கீழ்வேளுா் வட்டார வளா்ச்சி அலுவலகம், செப்.23-ல் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் , மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்று உயா்கல்விக்கான கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்றாா்.

வேதாரண்யம் சாா் ஆட்சியா் அமீத் குப்தா, வேதாரண்யம் வட்டார ஆத்மா திட்ட மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் வே.முருகையன், வேதாரண்யம் வட்டார ஆத்மா குழுத்தலைவா் என்.எஸ். சதாசிவம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் சு. செந்தில்குமாரி, வேதாரண்யம் நகராட்சி ஆணையா் த.சித்ரா சோனியா, முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளா் ப.சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது. செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நித... மேலும் பார்க்க