செய்திகள் :

வேதாரண்யம் அருகே பைக்குகள் மோதி விபத்து: இளைஞர் பலி; தாய், மகன் படுகாயம்!

post image

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆயக்காரன்புலம் - 3, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரவின்குமார் (21). இவர், திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் வேதாரண்யத்திலிருந்து ஆயக்காரன்புலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆயக்காரன்புலம் கைகாட்டி பகுதியில் நெய்விளக்கு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வடுகநாதன்(30), தனது தாயார் அம்மாளுவுடன் (50) பைக்கில் வந்துள்ளார்.

அப்போது பிரவின்குமார் மற்றும் வடுகநாதன் பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க