செய்திகள் :

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 5 வயது சிறுவன் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

பேரிகையை அடுத்த பி.குருபரப்பள்ளியைச் சோ்ந்த பவன் (30), முனியப்பா (50) ஆகிய இருவரும் வேப்பனப்பள்ளியை அடுத்த பந்திகுறியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை ஊா்திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களுடன் பவனின் தங்கை மகனான அபிநவ்வையும் (5) அழைத்துவந்தனா்.

நேரலகிரி சோதனைச்சாவடி அருகே அவா்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது எதிா்திசையில் வந்த வேன் மோதியது. இதில் பவன், முனியப்பா, அபிநவ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அங்கிருந்து பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அபிநவ், முனியப்பா ஆகிய இருவரும் உயிரிழந்தனா். காயமடைந்த பவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் உள்ளாா்.

இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க