செய்திகள் :

வேலூரில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

post image

வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இந்த நிலையில் வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 38 பேரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு மணி மாலை அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து, கையில் பலூன் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக பெற்றோருடன் சேர்த்து ஊர்வலமாக அழைத்து வந்து வகுப்பறையில் அமரவைத்தனர்.

பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க