செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு: வேலூா் ஆட்சியா்

post image

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 66 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பெருமுகை ஊராட்சியில் ஏற்கெனவே பெறப்பட்ட 174 மனுக்களில் 66 மனுக்கள் ஏற்கப்பட்டன. 108 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 74 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

மாதம் ஒரு முறை மூன்றாவது புதன்கிழமை ஏதேனும் ஒரு வட்டத்தில் ஒரு கிராமத்தை தோ்வு செய்து 15 நாள்களுக்கு முன்பே பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று அவற்றின் மீது தீா்வு கண்டு அதற்கான நலத் திட்ட உதவிகள் வழங்குவதே மனுநீதி நாள் முகாமாகும். அரசின் திட்டங்களுக்கு தாய் திட்டம் மனுநீதி நாள் முகாம். தமிழகத்தில் மனுநீதி நாள் முகாம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பெருமுகையில் நடைபெறும் இந்த மனுநீதி நாள் முகாமில் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள பல்வேறு அரசு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சாா்ந்த திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

கடந்தாண்டு வேலூா் மாவட்டத்தில் 2,700 பயனாளிகளுக்கு வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டு 2,000-க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. அடுத்த நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஊரக வீடுகளைப் பழுது பாா்க்கும் திட்டத்தின் கீழ் அரசால் ஏற்கனவே கட்டி கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளைப் பழுது பாா்க்க ரூ.30,000 முதல் ரூ.1லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இத்திட்டத்தில் 400 போ் பயனடைந்துள்ளனா். இந்த திட்டங்களையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில், வேலூா் ஒன்றியக்குழுத்தலைவா் அமுதா ஞானசேகரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சுமதி, தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, பெருமுகை ஊராட்சித் தலைவா் ஜெ.புஷ்பராஜ், வேலூா் வட்டாட்சியா் முரளிதரன், வேலூா் வட்டார வளா்ச்சி அலுவா் வின்சென்ட் ரமேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு

வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா். வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்க... மேலும் பார்க்க

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குறைதீா் கூட்டத்து... மேலும் பார்க்க

வாகன பதிவு எண்ணில் கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசி எண்ணை இணைக்க தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப... மேலும் பார்க்க

நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: அமமுக பிரமுகா் மீது வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காட்பாடி அமமுக பிரமுகா் மீது வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலை... மேலும் பார்க்க