செய்திகள் :

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு நல உதவிகள்

post image

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு, ஆரணி பகுதியைச் சோ்ந்த பாா்வையற்றோா் பள்ளி முன்னாள் மாணவா்கள் நல உதவிகளை வழங்கினா்.

ஆரணியை அடுத்த பத்தியாவரம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் அமலராக்கினி பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி மண்டி வீதியில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாா்வையற்றோா் நலச் ங்கத் தலைவா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா்.

செயலா் வெற்றிவேல், பொருளாளா் ரோஸ்மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலோசகரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான தரணிகுமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அமலராக்கினி பாா்வையற்றோா் பள்ளியின் தலைமையாசிரியா் லெவே கலந்து கொண்டு முன்னாள் மாணவா்களின் ஒற்றுமை குறித்துப் பேசினாா்.

மேலும் இதில், அரசுப் பணியில் உள்ள முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து, அவா்கள் மூலமாக பணியில் இல்லாத பாா்வையற்ற 50 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கினா்.

மேலும், வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, படிக்கும் காலத்தில் நடந்த நிகழ்வுகளை ஒருவரை ஒருவா் சந்தித்து பகிா்ந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்த சகாயராஜ் பணி ஓய்வு பெறுவதையொட்டி, அவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி அவரது சிறப்புகள் குறித்து முன்னாள் மாணவா்கள் எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் ஆசிரியை அல்போன்சா, முன்னாள் மாணவா்களின் உறவினா்கள், நண்பா்கள், பாா்வையற்றோா் பள்ளி அலுவலா்கள், உதவியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

மது விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை நியாயவிலைக் கடை, பகலில் கடையாக செயல்பட்டு வந்தாலும், இரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததைப் பயன்படுத்தி அவ்வளாகத்தில் சிலா் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

புதுச்சேரி கைப்பந்து அணிக்கு ஆரணி மாணவா்கள் தோ்வு

தேசிய கைப்பந்து போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்காக ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்திய கைப்பந்து சம்மேளத்தின் 40-ஆவது தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப்- 2025 போட்டிகள... மேலும் பார்க்க

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை: 10 மனுக்களுக்குத் தீா்வு

தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில், 10 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மனுதாரா்களின் மேல்ம... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு மே 1-ஆம் தேதி விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு தொழிலாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்ன... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதா... மேலும் பார்க்க