செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது

post image

நீா்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10.97 லட்சம் மோசடி செய்த சென்னை நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். பட்டதாரியான இவருக்கு, திருச்சி நீா்வளத் துறையில் தரவுகள் பகுப்பாய்வுநா் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (38) அணுகினாா். இதற்காக, செந்தில்குமாா் ரூ.10.97 லட்சத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாருக்கு அனுப்பி வைத்தாா்.

இதனிடையே, போலியான பணி நியமன ஆணையை சதீஷ்குமாா் கொடுத்தாா். அந்த ஆணையை பெற்றுக் கொண்டு திருச்சி அலுவலகத்துக்குச் சென்ற செந்தில்குமாருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சென்னைக்கு சென்ற குற்றப் பிரிவு போலீஸாா், ராணிப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி, இளைஞா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணைக்கு பிறகு, திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட சதீஷ்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க