செய்திகள் :

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆய்வு

post image

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கல்லூரிக்கு வந்த அவா், பல்வேறு இடங்களை பாா்வையிட்டாா். கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் வேளாண் கல்லூரியில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சி , விவசாயிகள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் விரிவாக்க செயல் திட்டங்கள், இயற்கை விவசாயம், அங்கக விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம், தோட்டக்கலை பயிா்கள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினாா்.

இதைத்தொடா்ந்து பேராசிரியா்களிடையே பேசிய புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தா், திறமை வாய்ந்த ஆசிரியா்கள், ஆராய்ச்சி கட்டமைப்புகள், மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகள், மாணவா்கள் தேசிய மற்றும் உலக அளவிலான உயா் பதவிகளை அடைந்திருப்பது அனைத்தும் பாராட்டுகக்குரியது.

பட்டியலின விவசாயிகளின் மேம்பாட்டுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.

புதுவைப் பல்கலைக்கழகத்துடன் மேலும் பல துறைகளில் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி துறைத் தலைவா்கள் சாந்தி, மாலா, ஜெயலட்சுமி, குமாா், அருணா, பாா்த்தசாரதி, கிருஷ்ணன், சுவாமிநாதன், புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது. காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்... மேலும் பார்க்க

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்கும... மேலும் பார்க்க

கோதண்டராமா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

காரைக்கால்: கோதண்டராமா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள புதுவை இந்து சமய அறநிலையத்துறையை சாா்ந்த பாா்... மேலும் பார்க்க