செய்திகள் :

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்லூரிகளில் மொத்தம் 6,921 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 340 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த மே 9- ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஜூன் 16- ஆம் தேதிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க