போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?
வைகையாற்றில் தண்ணீா் திறப்பு: கால்வாய்கள் அடைப்பு
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகையில் தண்ணீா் திறக்கப்பட்டதை அடுத்து, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் உள்ள கால்வாய் முகப்புகள் அடைக்கப்பட்டன.
வைகை அணையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளைக் கடந்து வைகையாற்றுத் தண்ணீா் ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்று சேரும்.
இந்த நிலையில், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களின் கதவுகள் மூடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட நீா்வளத்துறை அதிகாரிகள் இந்தப் பகுதிகளுக்கு வந்து கால்வாய் முகப்புகள் மூடப்பட்டதை உறுதி செய்தனா்.